என் மலர்
தேனி
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் கூடுதல் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து 60.04 அடியாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி 662 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 3608 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.50 அடியாக உள்ளது. 736 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4374 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. 8 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
கூடலூர் 3.4, பெரியாறு அணை 3, தேக்கடி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடி கொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 58.83 அடியாக உள்ளது. 764 கனஅடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3387 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வருகிற 15ம் தேதி தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பெரியாறு, வைகை அணைகளின் மொத்த நீர் இருப்பு 6 டி.எம்.சி. ஆகும். வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 703 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4633 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 15 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
- மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு 1582 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனவே விரைவில் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 2898 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.55 அடியாக உள்ளது. 1605 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு 200 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி நீருடன் சேர்த்து 1644 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4826 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.16 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 45.40 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. பெரியாறில் 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 23-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
கடந்த 6 நாட்களில் மட்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்காக ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 1350 கன அடி திறக்கப்பட்டு பின்னர் 900 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 460 கன அடி திறக்கப்பட்டு இன்று காலையில் மீண்டும் 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6125 கன அடி தண்ணீர் வருவதால் இன்று மாலையே 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு 4665 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக நாளை முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாகவும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடி ஆறு, வருஷநாடு, வைகை ஆறுகள் உள்ள பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். தற்போது பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 54.36 அடியாக உள்ளது. வரத்து 949 கன அடி. திறப்பு 72 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2617 மி.கன அடி.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களின் பாசனத்திற்கு ஜூன் முதல் வாரத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணை 27.8, தேக்கடி 13.6, போடி 4.4, மஞ்சளாறு, அரண்மனைபுதூர் தலா 4, வீரபாண்டி 3.2, கூடலூர் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது.
- அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 23ந் தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.85 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 14 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7741 கன அடி நீர் வருகிறது. இதனால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 100 கன அடியாக இருந்த நீர்திறப்பு 467 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 4234 மி.கன அடியாக உள்ளது.
லோயர் கேம்ப்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 4 எந்திரங்கள் மூலம் 168 மெகவாட் வரை மின்உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பெரியாறு அணையில் இருந்து ராட்சதகுழாய்களின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரைச்சல் பாலம் வழியாக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. நேற்று 120 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 786 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2545 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 183.98 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய் செல்லும் கால்வாய் பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெறுவதால் மதகுகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீரின் வேகம் அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவேண்டாம் என போலீசார், பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியாறு அணை 82.6, தேக்கடி 43.2, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 11.8, பெரியகுளம் 4, சண்முகாநதி அணை 6.2, அரண்மனைபுதூர் 11.6, வீரபாண்டி 1.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2, வைகை அணை 2.4, போடி 5.2 மி.மீ. மழை அளவு பதிவானது.
- வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 124.75 அடியாக உள்ளது.
அணைக்கு நேற்று காலை 7735 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7319 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்தபோதும் தமிழக பகுதிக்கு 100 கன அடி மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3569 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1-ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1-ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போதுதான் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதோடு 2-ம் போகத்திற்கான கால அளவு சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.51 அடியாக உள்ளது. வரத்து 623 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2487 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 182.70 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.48 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பெரியாறு அணை 112.4, தேக்கடி 51.2, கூடலூர் 13.4, உத்தமபாளையம் 12.4, பெரியகுளம் 1, சண்முகாநதி அணை 5.4 மி.மீ. மழை அளவு பதிவானது.
- இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டியுள்ள இடுக்கி மாவட்டத்திலும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 23ந் தேதி அணையின் நீர்மட்டம் 114 அடியாகவும், நீர் இருப்பு 1634 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் நீர் வரத்து 100 கன அடியாக இருந்தது. அதன்பிறகு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 7145 கன அடியாக இருந்தது. கடந்த 4 நாட்களாக பெய்த மழையால் 114 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 121.60 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளதோடு ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 7735 கன அடியாக உள்ள நிலையில் தமிழக பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் உயர்ந்து 2945 மி.கன அடியாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.22 அடியாக உள்ளது. நீர் வரத்து 507 கன அடி. தண்ணீர் திறப்பு 72 கன அடி. நீர் இருப்பு 2443 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 181 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.97 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி. இருப்பு 57 மி. கன அடி.
பெரியாறு 73, தேக்கடி 32, சண்முகாநதி அணை 5.8, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 4.6, போடி 2.2, சோத்துப்பாறை 1 மி.மீ. மழை அளவு பதிவானது.
- பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலம் தேக்கடி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தவாறு வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. 16 வருடங்களுக்கு பின் முன்கூட்டியே 8 நாட்களுக்கு முன்பு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3 நாட்கள் தேக்கடி படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்கள், மரங்கள் முறிந்து விழும் பகுதி ஆகியவற்றை கண்காணித்து அங்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவமழையை கையாள தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 585 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 114.90 அடியாக உள்ளது.
1710 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையில் 2389 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.46 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
அரண்மனைப்புதூர் 2, வீரபாண்டி 13.8, பெரியகுளம் 4.6, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 2, வைகை அணை 1.4, போடி 3.2, உத்தமபாளையம் 4.6, கூடலூர் 2, பெரியாறு அணை 27.6, தேக்கடி 21.4, சண்முகாநதி 1.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.
- தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார்.
பெரியகுளம்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை பெரியகுளத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வத்தலக்குண்டு சாலையில் தேவதானப்பட்டி அருகே வேல்நகரில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் அந்த கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனையடுத்து லட்சுமணன் காரை நிறுத்தியபோது கற்களை வீசிய நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் தான் கல்வீசி தாக்கியது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அந்தமானில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
குறிப்பாக வைகை அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் 53.58 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2496 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 1635 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 98.23 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. மழை எங்கும் இல்லை.
- நள்ளிரவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பம் தானம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-பரிமளம் தம்பதியின் மகள் பரிவதவர்த்தினி (வயது 15), மகன் விஷ்வா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் காலனி செல்லும் ரோட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ஆனால் பெற்றோர் இதனை பெரிதுபடுத்தாமல் தைலம் தடவிவிட்டு தூங்கி விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பரிவதவர்த்தினி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த பரிவதவர்த்தினி புதுச்சேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிக அளவில் வருகின்றனர்.
சின்ன சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவு தண்ணீரே வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் கும்பக்கரை அருவி, சுருளி அருவியிலும் அதிக அளவு தண்ணீர் வருவதால் கோடை விடுமுறைக்காக வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ஆனந்தமாக நீராடி செல்கின்றனர்.
மேகமலை அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு நுழைவுக் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு முன்பு வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குளிக்க வரும் நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அந்த பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், அண்டைமாநிலமான கேரள மாநிலத்தில் இதுபோன்ற இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதோடு, சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி சென்று வர ஏதுவாக உள்ளது.
எனவே மேகமலை அருவிக்கும் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து பேட்டரி வாகனங்களை இயக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கடந்த சில ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில் அருவியில் பாதுகாப்பு கம்பிகள், பெண்கள் உடை மாற்றும் அறை பெண்கள் கழிப்பறை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தவில்லை. எச்சரிக்கை பலகை மற்றும் வன காவலர்கள் இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நடைபெற்றது.
இங்கு வசூல் செய்யப்படும் பணம் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். மேலும் அருவியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட கூடுதலாக வனத்துறை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதனிடையே மேகமலை ஊராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்ததால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.






