என் மலர்
தேனி
- பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.
மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
- தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.
அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
- சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருேக உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த ஜூன் 15ந் தேதி அணையின் நீர்மட்டம் 61.22 அடியாக இருந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முதல்போக சாகுபடிக்காக 900 கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் அங்கிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் 25ந் தேதி அணையின் நீர்மட்டம் 63.27 அடியாக இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஆற்றின் வழியாக 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 2ந் தேதி 59.02 அடியாக குறைந்தது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மீண்டும் 60 அடிக்கு மேல் உயர்ந்து இன்று காலை 60.81 அடியாக உள்ளது. அணைக்கு 1492 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 9069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3760 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 1107 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 2062 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 6.2, தேக்கடி 6.6. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் மேகமலை பகுதியில் உள்ள அணைகளில் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய அணைகளில் தண்ணீர் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சி அளிக்கிறது. இதனை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நீர் வரத்து அதிகரிப்பால் இரவங்கலாறு அணையில் இருந்து கீழ்நோக்கி செல்லும் ராட்சத குழாய் மூலம் சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும்.
- கமல்ஹாசன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார்.
தேனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக கொண்டு வந்ததுதான் த.வெ.க. கட்சி.
பா.ஜ.க. பற்றி பேசுவதற்கு விஜய்க்கு எந்த அருகதையும் கிடையாது. த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும். அவர் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார். தி.மு.க.வின் A டீம்தான் விஜய்.
தி.மு.க. எப்படி மத்திய அரசு குறித்தும், மோடி குறித்தும் அவதூறு பரப்புகிறதோ அதேமாதிரிதான் தி.மு.க. செய்ய வேண்டிய வேலையை இன்னொரு தளத்தில் செய்கிறார்.
கடந்த காலத்தில் கடந்த தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை தயார் செய்தார்கள். இந்த தேர்தலுக்கு ஜோசப் விஜயை தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதனால் த.வெ.க. மக்களால் புறக்கணிக்கப்படும்.
த.வெ.க. தலைவர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்தவிதத்திலும் எதிரொலிக்காது. சாதக பாதகத்தை ஏற்படுத்தாது. அவர் நிச்சயமாக இந்த தேர்தலில் 2 அல்லது 3 சதவீத ஓட்டு வாங்குவார்.
அதற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் போய் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க.வுடன் ஐக்கியமானதோ... மானஸ்தன் அல்லவா கமல்ஹாசன். அந்த மானஸ்தன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார். எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
தேனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.
ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்டோ டிரைவர் போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது.
- 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் எஸ்.பி. நடவடிக்கை.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுயசம்பு மற்றும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரை அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு உள்ளிட்ட போலீசார் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வாலிபர் இன்னும் தேவதானப்பட்டியில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் எதற்காக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்? அவர் மீதான கொடூர தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த தேனி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வாளர் மற்றும் இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
- தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
- ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுயசம்பு மற்றும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரை அங்கு வைத்து இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயசம்பு உள்ளிட்ட போலீசார் காலால் எட்டி உதைத்தும் லத்தியால் தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் ஏராளமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து இன்னும் பல போலீசார் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசாரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் சம்மந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட வாலிபர் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 14-ந்தேதி பொங்கல் தினத்தன்று போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆட்டோ டிரைவரான அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கும் வீடியோ அவரது வக்கீல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வாலிபர் இன்னும் தேவதானப்பட்டியில்தான் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் எதற்காக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்? அவர் மீதான கொடூர தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
- அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.80 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 2,251 கன அடியாகவும் காணப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 133.65 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4,154 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,084 கன அடியாக இருந்தது.
இந்தநிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
- ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
- மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.
இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.
மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.
போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
- நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பல்வேறு அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்திருந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடும்பாறை போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கேரளா செல்வதற்கு முக்கிய வழித்தடம் என்பதால் அருவிகளில் குளித்துவிட்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
- அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் வைகை அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு 900 கனஅடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கனஅடி என மொத்தம் 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இருந்த போதும் அணைக்கு 1565 கனஅடி நீர் வருவதால் நீர்மட்டம் 62.30 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் 4057 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டுமா என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்பிடிப்பு பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.15 அடியாக உள்ளது. 3147 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.5200 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 83.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை நீர்மட்டம் 46.10 அடியாக உள்ளது. 3 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
வீரபாண்டி 1.4, உத்தமபாளயைம் 1.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 18.2, தேக்கடி 6.2, சண்முகாநதி 1.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.






