என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
    X

    தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

    • அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது.

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி, குமுளி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 132.80 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 2,251 கன அடியாகவும் காணப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 133.65 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4,154 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,084 கன அடியாக இருந்தது.

    இந்தநிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 கனஅடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    Next Story
    ×