search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
    X

    2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

    • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியம் நெய்தல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 73).

    இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதேப்போல் கும்பகோணம் அருகே உள்ள அன்னூர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (29) என்பவர் தஞ்சை மருத்துவ கல்லூரி அவசர வார்டு வளாகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தழகன், சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×