search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலி
    X

    ராஜா வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இறந்த அண்ணாதுரை.

    தொழிலாளி வாய்க்காலில் விழுந்து பலி

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ராஜா வாய்க்காலில் தொழிலாளி விழுந்து பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ராஜா வாய்க்கால் மதகுக்கு கீழ் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாதுரை (வயது 52) என்பதும் இவர் சம்பவத்தன்று ஆனங்கூர் ராஜா வாய்க்கால் அருகே உள்ள தண்ணீர் திறந்து விடும் மதகின் மேல் அமர்ந்து மது குடித்த போது தவறி மதகு கால்வாயில் விழுந்து ‌‌‌இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×