search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி
    X

    வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி

    வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணி

    • திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 971 வீடுகளுக்கு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர்
    • சுதந்திர திருநாள் ஆண்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்வகையில் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர திருநாள் ஆண்டினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்வகையில் மாவட்டநிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 50 ஆயிரத்து 633 மூவர்ண தேசியக் கொடிகள் தயார் செய்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியில் 35 மகளிர் சுய உதவி குழுக்கள் ஈடுபட்டு ள்ளனர். தேசியக்கொடிகள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கின. திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் 15 ஆயிரத்து 971 வீடுகளுக்கு வழங்கும் பணியினை நகர மன்ற தலைவர் பவனப்ரியா செந்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர் அசோகன், துப்புரவு அலுவலர் மூர்த்தி, நகர மன்ற எழுத்த செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×