search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
    X

    கூட்டத்தில் தாசில்தார் கைலாச குமாரசாமியை, பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேசிய போது எடுத்தபடம்.

    தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

    • ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கைலாச குமாரசாமி, டாஸ்மாக் தாசில்தார் செல்வகுமார் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் சமாதான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் குரங்கணி கோவில் திருவிழா நடைபெறும் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தற்காலிகமாக மூடுவது என்றும், பின்னர் 3 மாத காலத்திற்குள் நிரந்தரமாக மூட ஏற்பாடு செய்யப்படும் என தீர்வு மேற்கொள்ளபட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. மறியல் போராட்டத்திற்காக நேற்று ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கைலாச குமாரசாமி, டாஸ்மாக் தாசில்தார் செல்வகுமார் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் சமாதான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குரங்கணி கோவில் திருவிழா நடைபெறும் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தற்காலிகமாக மூடுவது என்றும், பின்னர் 3 மாத காலத்திற்குள் நிரந்தரமாக மூட ஏற்பாடு செய்யப்படும் என தீர்வு மேற்கொள்ளபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொது செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் , செய்தி மற்றும் ஊடக பிரிவு தலைவர் முத்து ராமலிங்கம், மாநில கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மாரிதுரைசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் லோபோ, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்குமார், திருச்செந்தூர் நகரதலைவர் நவமணிகண்டன், ஏரல் ஓன்றிய பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட அரசு தொடர்புதுறை தலைவர் வெங்கடேஷ், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட செயலாளர் முத்துமாலை, ஆழ்வை கிழக்கு மண்டல் கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், அரசு தொடர்பு துறை தலைவர் பிச்சமுத்து, செயற்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி, ஏரல் வணிகர் பிரிவு தலைவர் விஜயராகவன், ஏரல் சிறுபான்மைபிரிவு தலைவர் ஜெனிஷ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×