என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் தூய்மை பணியாளரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது
- மதுபோதை தகராறில் வெறிச்செயல்
- கொலை செய்த சின்னதுரையை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அனிதா (வயது 42). இவர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.
இந்தநிலையில் அனிதாவை அவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனையடுத்து அனிதா சிங்காநல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (48) என்பவரை 2-வது திருமணம் செய்தார். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு ஒன்றும் தெரியாதது போல் படுத்து தூங்கினார்.
அனிதாவின் மகன் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அப்போது எழுந்துவந்த சின்னதுரை ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடினார்.
இதுகுறித்து அனிதாவின் மகன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சின்னத்துரை அனிதா எதற்காக தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை எனவும், தான் அயர்ந்து தூங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தூக்கு கயிற்றில் இருந்து அனிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அனிதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சின்னதுரையை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கி கயிற்றில் தொங்கவிட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சின்னதுரையை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்