search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய காட்சி.

    சங்கரன்கோவிலில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் காளிராஜ், மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும். ெபாதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் பொது குழு உறுப்பினர் காளிராஜ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பிஜிபி ராமநாதன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், பேரவை செயலாளர் சவுந்தர், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தென்காசி வடக்கு மாவட்டம், மானூர் வடக்கு ஒன்றியம் வன்னிக்கோனேந்தலில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில் மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி எஜமான் செந்தில்குமார், அந்தோனி டேனியல், தெற்கு அச்சம் பட்டி கிளை செயலாளர் கார்த்திக், செல்லப்பாண்டியன், கிருஷ்ணசாமி, பால்ராஜ் மற்றும் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×