search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • பாபநாசத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    இப்பேரணி பாபநாசம் பேரூராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்தது. இதில் துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்து மேரி மைக்கேல் ராஜ், ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×