search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு
    X

    இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாட்டில் மாவட்ட செயலாளர் பாரதி பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

    • பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.
    • வருகிற 26-ந் தேதி பாபநாசத்தில் ஒன்றிய மாநாடு நடைபெறும்

    பாபநாசம்:

    பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். ஒன்றிய பொருளாளர் சேகர் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் தீர்மானங்கள் வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    முன்னதாக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் கொடியினை ஏற்றி வைத்தார். இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சந்திரா, கிளை செயலாளர்கள் ஜெகநாதன், இலங்கேசன், ராஜ், ரவி, ராஜேந்திரன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இம்மாநாட்டில் வருகிற 26-ந் தேதி பாபநாசத்தில் ஒன்றிய மாநாடு நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 24-வது மாநாட்டில் குடும்பத்தோடு அனைவரும் கலந்து கொள்வது எனவும், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு ஆகிய இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து வழங்க பட்டா வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் புதிய ஒன்றிய செயலாளராக பொன். சேகர், ஒன்றிய துணைச் செயலாளராக கனகராஜ், ஒன்றிய பொருளாளராக சாமு. தர்மராஜன் உள்ளிட்ட 13 புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×