என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி
- 2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார்.
- வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.
போரூர்:
ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் "வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டின் தொகை வரம்பை மேலும் ரூ.50ஆயிரம் அதிகரித்து தருகிறேன்" என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய அந்தோனி தனது கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய ஓ.டி.பி எண் விபரங்களை அவரிடம் கூறினார்.
2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார். அப்போது கிரெடிட் கார்டின் தொகை வரம்பு முடிந்துவிட்டது என்று குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏற்கனவே அந்தோனியின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ. 81 ஆயிரத்து 760 எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் துவாரகேஷ் சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் தினந்தோறும் மாலையில் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதை உண்மை என்று நம்பிய அவர் அதில் இருந்த "கூகுள் பே" எண்ணிற்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பி முதலீடு செய்தார். சிறிது நேரத்தில் மேலும் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்புமாறு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.
இதனால் சந்தேகமடைந்த துவாரகேஷ் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் என்பது தெரிந்து சுதாரித்துக்கொண்டார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்