search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் ஊழியர்களிடம் ரூ.7 லட்சம் கொள்ளை
    X

    தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் ஊழியர்களிடம் ரூ.7 லட்சம் கொள்ளை

    • ரியல் எஸ்டேட் ஊழியர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • ரியல் எஸ்டேட் ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும் தெரிகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்த 2 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்றிரவு ஊழியர்கள் 2 பேரும் அலுவலகத்தில் இருந்த ரூ. 7 லட்சத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சாயர்புரம் சென்றனர். புதுக்கோட்டை தேரி ரோட்டில் அவர்கள் சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 7 லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஊழியர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரியல் எஸ்டேட் ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருவதாகவும் தெரிகிறது.

    எனவே அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×