என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
என்.எஸ்.சி. போஸ் சாலை நாளைமுதல் ஒரு வழி பாதையாக மாற்றம்
- ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை, பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.
- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.
பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிராட்வே சாலை) என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என்.எஸ்.சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நாளை (22-ந்தேதி) முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை தடை செய்யப்படுகிறது.
என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் எஸ்பிளனேடு சாலைகளில் வரும் வாகனங்கள் ஸ்டான்லி ரவுண்டானா செல்வதற்கு குறளகம் சந்திப்பு என்.எஸ்.சி. போஸ் சாலை பாரீஸ் சந்திப்பு இடது புறம் திரும்பி ராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம். முத்துசாமி சாலையில் வரும் வாகனங்கள் முத்துசாமி சாலை ராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை, ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை, பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம்.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு ராஜாஜி சாலை இப்ராகிம் சாலை வழியாக செல்லலாம். கொத்தவால்சாவடிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கம் போல் அனுமதிக்கப்படும். ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து பிரகாசம் சாலை- அண்ணா பிள்ளை தெரு வழியாக கொத்தவால் சாவடிக்கு உள்ளே செல்லலாம். அண்ணா பிள்ளை தெரு- டேவிட்சன் தெரு தாதா முத்தியப்பன் தெரு பிரகாசம் சாலை வழியாக கொத்தவால் சாவயை விட்டு வெளியே செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்