search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்குடியில் சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
    X

    பெருங்குடியில் சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி

    • பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
    • படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அவனியாபுரம்:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் தேவர் நகரை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா மகன் அப்துல் கலாம் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜா முகமது மகன் ரகீம் (23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பெருங்குடி நோக்கி சென்றனர்.

    அவர்கள் பெருங்குடி மருதுபாண்டியர் சிலை அருகில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவனியாபுரம் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பலியான 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு வாகனத்தை திண்டுக்கல் மாவட்டம் தேத்தம்பட்டியைச் சேர்ந்த முருக பாண்டியன் (46) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் வேகமாக வந்ததால் இந்த விபத்து நடந்ததா? இதில் யார் மீது தவறு உள்ளது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான அப்துல்கலாம் கார் ஷோரூமில் பணியாற்றி வந்ததும், ரகீம் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×