search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலப்பிரச்சனையில் மோதல்: விவசாயி காதை கடித்து துப்பிய வாலிபர் கைது
    X

    நிலப்பிரச்சனையில் மோதல்: விவசாயி காதை கடித்து துப்பிய வாலிபர் கைது

    • விவசாயியான மாரியப்பனுக்கும், இவரின் நிலத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் வெள்ளையன் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
    • நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எச்சணம்பட்டி கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது67).

    விவசாயியான இவருக்கும், இவரின் நிலத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் வெள்ளையன் குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதை அடுத்து சர்வேயர் மூலம் நிலம் அளக்கப்பட்டு எல்லைகள் போடப்பட்டது. இந்நிலையில் நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாரிமுத்துவை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினர்.

    ரத்த காயம் ஏற்படுத்தியதுடன் மாரிமுத்துவின் காதை கூட்டத்தில் இருந்தவர்கள் கடித்து துப்பியுள்ளனர்.

    இதனால் வலி தாங்க முடியாமல் மாரிமுத்து சத்தம் போட்டதால் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளையன் மகன் லட்சுமணனை கைது செய்தனர். தப்பி ஓடிய வெள்ளையன் அவரது மனைவி தனபாக்கியம் உறவினர் சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×