என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் முதியவரிடம் செல்போன் திருடிய ஆந்திர வாலிபர் கைது
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஜெயராமனின் செல்போனை திருடி தப்பிசென்று விட்டார்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்த போது சென்ட்ரல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
ராயபுரம்:
திருவொற்றியூர்,காலடிப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் (69). இவர் சென்ட்ரல் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருவொற்றியூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண்28) பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஜெயராமனின் செல்போனை திருடி தப்பிசென்று விட்டார்.
இதுகுறித்து பூக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்த போது சென்ட்ரல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கராடி பவன்குமார் (20) என்பதும் முதியவர் ஜெயராமனிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் ரெயில் மூலம் வரும் அவர் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புகுந்து செல்போன்களை திருடி அதனை ஆந்திராவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்