search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லநாட்டில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
    X

    முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    வல்லநாட்டில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

    • முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் 6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காச நோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தொடங்கி வைத்தார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகு மார், மாவட்ட நலக் கல்வியா ளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வை யாளர் இசக்கி மகாராஜன் வரவேற்று பேசினார். டி.வி.எஸ். சீனி வாசன் சேவைகள் அறக் கட்டளையின் கள இயக்குநர் விஜயகுமார் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார். முகாமில் 25 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப் பட்டது.

    6 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.

    முகாமில் எக்ஸ்ரே நுட்புனர் கிறிஸ்டின் குமார தாஸ், இருட்டறை உதவி யாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்து லட்சுமி, அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர் தனுஷ்கோடி, சுகாதா ரத்துறை பணியா ளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×