search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை-அன்னதானம்
    X

    வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் பாண்டியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.


    ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை-அன்னதானம்

    • ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை.
    • பின்னர் அன்னதானம் நடைபெற்றது.


    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசாமி கோவிலுடன் இணைந்த சொர்ண மலை கதிர்வேல் முருகன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீநிவாச பஸ் சர்வீஸ் தொழிலதிபர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கமலேஸ் தீப்பெட்டி ஆலை அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன், முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி மலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியன் பாண்டியன் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் விலாஸ் கடலைமிட்டாய் அதிபர் சக்திவேல், தூத்துக்குடி புரோட்டா கடை அதிபர் முத்து பிரகாஷ், பத்திரம் எழுத்தர் செல்லையா,

    தொழிலதிபர்கள் தனபால், அசோக் மாறன், அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் லவராஜா, சண்முகசுந்தரம், மாரிமுத்து, செல்வம், சுப்பிரமணியன், முருகன், முத்துமாரியப்பன், பொண்ணுபாண்டி, காளிராஜ், பாலமுருகன், கதிரேசன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×