search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வாலிபருக்கு  அரிவாள்வெட்டு-ஐஸ் வியாபாரி கைது
    X

    தூத்துக்குடி வாலிபருக்கு அரிவாள்வெட்டு-ஐஸ் வியாபாரி கைது

    • ஐஸ் வியாபாரி அந்தோணி செல்வராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகநயினாரை வெட்டியுள்ளார்.
    • முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து ஐஸ் வியாபாரி செல்வராஜை கைது செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் அய்யாச்சாமி,இவரது மகன் ஆறுமுகநயினார் (வயது 31) கூலித் தொழிலாளி.

    தகராறு

    அப்பா, மகன் இருவருக்கும் நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைகலப்பு ஏற்பட்டு ஆறுமுகநயினார் தனது அப்பா அய்யாசாமியை அடிக்க கம்பை எடுத்துக்கொண்டு விரட்டியுள்ளார்.

    மகன் அடிக்க வருகிறான். காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டபடி ஓடிய அய்யாச்சாமி அருகில் இருந்த ஐஸ் வியாபாரி அந்தோணி செல்வராஜ்(62)வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து மகன் சென்றபின் அய்யாச்சாமி கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டார்.

    வெட்டு

    இந்நிலையில் அங்கு வந்த ஆறுமுகநயினார், அந்தோணி செல்வராஜை அவதூறாக பேசி,எப்படி எங்க அப்பாவுக்கு நீ அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு,அந்தோணி செல்வராஜின் வீட்டு கதவை எட்டி உதைத்து உடைத்துள்ளார். மேலும் அவரையும் அடிப்பதற்காக கம்பால் தாக்கியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி செல்வராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகநயினாரை வெட்டியுள்ளார்.

    இதனை எதிர்பார்க்காத ஆறுமுகநயினார் கையால் தடுத்துள்ளார்கள். இதனால் கையில் வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

    கைது

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறுமுகநயினார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து ஐஸ் வியாபாரி செல்வராஜை கைது செய்தார்.

    Next Story
    ×