search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை நகை வியாபாரிகளிடம் ரூ.7.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது
    X

    கோவை நகை வியாபாரிகளிடம் ரூ.7.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது

    • மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
    • பழனிவேல் என்ற நகைவியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், மணிகண்டன்(40) என்ற நகைவியாபாரியிடமும் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.

    கோவை:

    கோவை ராமநாதபு ரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர், நான் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.

    அசோக்குமார் ரூ.1 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வந்தனர்.

    இதேபோன்று காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகைவியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன்(40) என்ற நகைவியாபாரியிடமும் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அசோக்குமார் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    3 பேரிடமும் தொழில் ரீதியான பழக்கத்தில் ஒரே மாதிரி பேசி அசோக்குமார் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அவர் பலரிடமும் இது போல் மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அசோக் குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    மேலும் இவர் கோவையில் தங்கி இருக்கும் போது பழைய நகையை வாங்கி விற்பனை செய்யும் நகை வியாபாரிகளிடம் பழகியுள்ளார். அதன் மூலம் நகை வியாபாரிகளிடம் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டு குறைந்த விலைக்கு தருவதாக கூறி நூதன மோசடி ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அசோக்குமாரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×