search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தனியார் மாலில் ரூ.5½ லட்சம் மோசடி
    X

    கோவையில் தனியார் மாலில் ரூ.5½ லட்சம் மோசடி

    • கணக்காளரை கைது செய்தனர்
    • கணக்கை காட்டாமல் மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலின் வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் சார்பில் உணவு மையம் உள்ளது.

    இங்கு கடந்த சில மாதங்களாக செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த பாலாஜி செல்வராஜ் (வயது 32) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அங்கு நடைபெறும் கணக்கு வரவு, செலவுகளை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 289 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அங்கு கணக்காளராக பணியாற்றிய பாலாஜி செல்வராஜ் உரிய கணக்கை காட்டாமல் கணக்கை மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவரிடம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதனால் நிர்வாகத்தினர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×