search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி
    X

    புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    ஆலங்குளம் அருகே தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி

    • கருவந்தா கிராமத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
    • ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் வழிகாட்டுதலின் படி ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் கருவந்தா கிராமத்தில், தி.மு.க.வில் 1 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை அடையும் வண்ணம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை யூனியன் சேர்மன் திவ்யா மணிகன்டண் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பூத் கமிட்டி பொறுப்பாளர் கடங்கனேரியை சேர்ந்த அய்யம்பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்பால்துரை மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திலீப்ராஜா மற்றும் கருவந்தா கிளை செயலாளர்கள், ஊத்துமலை மாவட்ட பிரதிநிதி ராமசந்திரன், அரசு ஒப்பந்தக்காரர் பொன்தாய்ஆனந்த், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் படித்துரை மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×