search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மம்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
    X

    ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட காட்சி.

    அம்மம்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

    அம்மம்பாளையம் கிராமத்தில் வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அம்மம்பாளையம் கிராமத்தில் துரைசாமி என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இதை அறிந்த வருவாய் துறையினர், 70 சென்ட் ஏக்கர் நிலத்தினை மீட்டனர். வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டனர். மேலும் இனிமேல் ஆக்கிரமிப்பு ஏதும் செய்யக்கூடாது, என ஆக்கரமிப்பு தாரர்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

    இதில் வட்டாட்சியர் மாணிக்கம்,வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×