search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்
    X

    பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்

    • பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை வைத்துள்ளார்.
    • வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனிமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை கூறியிருப்பதாவது:-

    வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். அன்று பெரும்பாலானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று பண்டிகையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர்.

    வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-ந் தேதி அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்தால் பெற்றோர்களும், மாணவர்களும் ஊர் திரும்புவதற்கு வசதியாக அமையும். பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×