என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும்
- அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும் என வி.சி.கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
- கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் பாசித் இல்யாஸ், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கீசை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே முறையாக ஆய்வு செய்து கூடுதல் மருத்துவர்களை நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.
வட்டாட்சியர் அலுவல கத்தில் இலவச பட்டா, அரசு விதவை மானிய தொகை, முதியோர் உதவித்தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்