search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பு
    X

    இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பு

    • ராமேசுவரம் மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன் வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மண்டபம் மீன்வள உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், கடல்வள மேற்பாா்வையாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் மண்டபம் வடக்கு கடற்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த விசைப்படகை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் பிடித்து வந்த 2 ஆயிரம் கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா்.

    மேலும் அந்த படகுக்கான மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் விநியோகத்தை அதிகாரிகள் ரத்து செய்தனா்.

    Next Story
    ×