என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரட்டை மடி வலை"
- நடேசராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோர் கடலில் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர்.
- இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது.
பேராவூரணி:
சேதுபாவாசத்திரம் அருகே தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் கரையோரத்தில் மீன் பிடி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு நாட்டுப் படகு மீனவர்களின் வலைகள் சேதம் அடைவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நாகப்பட்டினம் மீன் துறை இணை இயக்குனர் ஆணையின்படி, தஞ்சாவூர் மீன் துறை உதவி இயக்குனர் சிவகுமார் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் மீன் துறை ஆய்வாளர் துரைராஜ், வேதாரண்யம் மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோர் கடலில் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது முத்து ப்பேட்டை செல்லக்கண்ணு வாய்க்கா லுக்கு நேரே மூன்று நாட்டிகல் மைலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும், மல்லிபட்டினத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளும் அரசினால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்டது கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டது.
மேலும் மூன்று நாட்டிகல் மைலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றும் கண்டறி யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட 11 விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ராமேசுவரம் மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.
- அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன் வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மண்டபம் மீன்வள உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், கடல்வள மேற்பாா்வையாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் மண்டபம் வடக்கு கடற்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது கரை திரும்பிக் கொண்டிருந்த விசைப்படகை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் பிடித்து வந்த 2 ஆயிரம் கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா்.
மேலும் அந்த படகுக்கான மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் விநியோகத்தை அதிகாரிகள் ரத்து செய்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்