search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்மாவட்டச் செயலாளர் எம்.ஏ, முனியசாமி தலைமையில் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

    • ராமநாதபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட அ. தி. மு. க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் மண்டபம் ஒன்றியம் (மேற்கு) செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் பாரதி நகர் பஸ் நிலையம் முன்பாக தி.மு.க.அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ முத்தையா, முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட அதிமுக இணை செயலாளர் கவிதா சசிக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர்கள் ஜமால் (பரமக்குடி), பால்பாண்டியன் (ராமநாதபுரம்), ஜகுபர் உசேன் (கீழக்கரை) ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கருப்பையா, ஜானகிராமன், குப்புசாமி, லோகிதாசன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், செந்தில்குமார், சரவணகுமார், ராம்கோ தலைவர் சுரேஷ், முன்னாள் ராமநாதபுரம் நகர செயலாளர் வரதன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் செல்வராஜ் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க., ஒன்றிய, நகரம், பேரூர் செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள், கிளை, வார்டு செயலாளர்கள், கட்சியில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×