என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியார் பஸ்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
- தனியார் பஸ்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- “திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராததை கண்டித்து
புதுக்கோட்டை:
திருமயம் நகருக்குள் திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-திருச்சி ஆகிய தனியார் பஸ்கள் பகல் நேரங்களில் வந்து செல்கின்றன. ஆனால் மாலை நேரத்திற்கு பின்பு திருமயம் நகருக்குள் தனியார் பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது. மேலும் திருமயம் நகருக்குள் வருவதற்காக பொதுமக்கள் காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் பஸ்களில் ஏறினால் திருமயத்திற்குள் செல்லாது என பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதனை கண்டித்து திருமயம் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் நேற்று திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்த 2 தனியார் பஸ்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், தனியார் பஸ் டிரைவர்களிடம் கூறுகையில், மாலை நேரங்களில் புறவழிச் சாலையை பயன்படுத்தி அந்த வழியாக செல்வது போன்று, பகல் நேரத்திலும் திருமயம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர்கள் எப்போதும் திருமயத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து மறித்து வைத்து இருந்த 2 பஸ்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்