search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு
    X

    பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
    • விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் பாண்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்். ஊராட்சி மன்ற தலைவி சுந்தரி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ராஜாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவி சுந்தரி கலந்து கொண்டார். முன்னதாக ஆசிரியர் ராஜமாணிக்கம் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராய் ட்ரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் சார்பில் பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை நிர்மலா நன்றி கூறினார்.

    Next Story
    ×