search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடி அருகே மண் கடத்திய டிரைவருக்கு வலைவீச்சு
    X

    பணகுடி அருகே மண் கடத்திய டிரைவருக்கு வலைவீச்சு

    • பணகுடி அருகே உள்ள பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நேற்று சங்கனாபுரம் சாலையில் ரோந்து சென்றனர்.
    • டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் நேற்று சங்கனாபுரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதி பெறாமல் மண் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அதனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×