search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  போலீசார் ரோந்து -300 மது பாட்டில்களுடன் 2 வாலிபர்கள் கைது
    X

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.


    சிவகிரி அருகே போலீசார் ரோந்து -300 மது பாட்டில்களுடன் 2 வாலிபர்கள் கைது

    • போலீசார் சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • முனீஸ்வரன் ,ஜெயசூர்யா ஆகியோர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விஸ்வநாதப்பேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    மதுபாட்டில்கள் பறிமுதல்

    அப்போது தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 38) என்பவரும், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவை சேர்ந்த ஜெயசூர்யா (22) என்பவரும் தெற்கு சத்திரம் பிள்ளையார் கோவில் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் 2 பேரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×