search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் விஷம் குடித்தனர் - தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்-2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை
    X

    குடும்ப தகராறில் விஷம் குடித்தனர் - தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்-2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை

    • கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இது தொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கை:

    அம்பை பெரியகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கார்த்திகை செல்வி (வயது30). இவர்களுக்கு முத்துமாரி (6), சுபதர்ஷனி (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்றும் அவர்களுக் கிடையே வக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் மனமுடைந்த கார்த்திகை செல்வி தனது மகள்களுடன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×