search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கம் தொடக்கம்
    X

    துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கம் தொடக்கம்

    • மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    • கோவை ரைபிள் கிளப்பின் முன்னாள் செயலர் தொடங்கி வைத்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கடந்த 19-ந் தேதி துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கத்தை கோவை ரைபிள் கிளப்பின் முன்னாள் செயலர் கே.மருதாசலம் தொடங்கி வைத்தார். பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் டாக்டர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர்.பிரியதர்ஷினி மற்றும் முன்னாள் மாணவர் டாக்டர்.கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×