search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி- 2 வாலிபர்கள் படுகாயம்
    X

    நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி- 2 வாலிபர்கள் படுகாயம்

    • சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் தேவி மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கீழக்கல்லூரைச் சேர்ந்த அருண்குமார், சக்தி நாராயணன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தருவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவி(வயது 59). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சர்ச் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கீழக்கல்லூரைச் சேர்ந்த அருண்குமார், சக்தி நாராயணன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்துள்ளனர். அவர்களும் ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×