search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
    X

    பயிற்சி குறித்து எடுத்துரைத்த போது எடுத்த படம்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை

    • செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது
    • பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண் 61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு நிதியுதவியுடன், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான மஞ்சித் வரவேற்று பேசினார்.

    ராம்கோ பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியர் கேசவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் பெனோ வாழ்த்தி பேசினார். முன்னதாக ஐ.இ.இ.இ. மாணவர் தலைவி கவுசியா, துணைத்தலைவி முத்து சுவேதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர். இப்பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×