search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
    X
    மோட்டார் சைக்கிள் எரிந்து கிடக்கும் காட்சி.

    தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

    • தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் திலக்(வயது 16). இவர் மீன்பிடி துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் திலக்(வயது 16). இவர் மீன்பிடி துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை தாமஸ் நகர் பூங்கா பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளர். நள்ளிரவில் அவரது மோடடார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் திலக்கிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனே அவர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகியது.

    இதுதொடர்பாக திலக், தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×