search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் மொபட் திருடியவர் கைது
    X

    களக்காட்டில் மொபட் திருடியவர் கைது

    • களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது67). சலவைதொழிலாளியான இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் அயனிங் கடை நடத்தி வருகிறார்.
    • திருட்டு போன மொபட்டின் மதிப்பு ரூ 12 ஆயிரம் ஆகும்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது67). சலவைதொழிலாளியான இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் அயனிங் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மொபட்டில் களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே மொபட்டை நிறுத்தி விட்டு, பஸ் நிலையத்திற்குள் சென்று தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் அவரது மொபட்டை திருடி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ 12 ஆயிரம் ஆகும்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மொபட்டை திருடியது களக்காடு ஜவகர்வீதியை சேர்ந்த நெல்சன்ராஜா (46) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×