search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    X

    காலை சிற்றுண்டி திட்டத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    • முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமையல் கூட புதிய கட்டிடத்தை ஆர்டி எம் ஏ.ஜானகி திறந்து வைத்தார்.
    • எம்.எல்.ஏ பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி.கலைவாணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், மேலாளர் காதர் கான், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுத்தர் ராஜ கணேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை பன்னீர்செல்வம் எம்எல்ஏ தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கினார்.

    முன்னதாக காலை சிற்றுண்டி மைய சமையல் கூட புதிய கட்டிடத்தை ஆர்டி எம் ஏ. ஜானகி திறந்து வைத்தார். விழாவில் கல்வித்துறை அதிகாரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முழுமதி, ஜெயந்தி, முபாரக், ராஜேஷ், ராமு, பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் செந்தில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×