search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கல்லூரி மாணவி மாயம்
    X

    தூத்துக்குடியில் கல்லூரி மாணவி மாயம்

    • மகாலட்சுமி தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • மகாலட்சுமி நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19) தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் மகாலட்சுமி நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது அப்பா மாரியப்பன், அம்மா புஷ்பா உறவினர் வீடு, உள்ளிட்ட பல இடங்களிலும் தேடி யும் கிடைக்காததால் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    Next Story
    ×