search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை
    X

    கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுப்பழக்கத்தால் உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த அவர் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×