என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது
- இயற்பியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோவன் மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் வழிமுறை நெறிகாட்டி மையம் சார்பில், தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு குழு இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கொண்டு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார். பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள், பேராசிரியர் கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வழிமுறை நெறிகாட்டி மைய இயக்குனர் சேகர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்பேரில், வழிமுறை நெறிகாட்டி மைய துணை இயக்குனர் மருதையா பாண்டியன் மற்றும் முதுநிலை பொருளியல் மாணவர்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்