search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்குடி பொறையான் கோவிலில் மஹா சண்டி ஹோமம்; கலெக்டர் சாமி தரிசனம்
    X

    ஹோமத்தில் கலெக்டர் மகாபாரதி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டார்.

    மணக்குடி பொறையான் கோவிலில் மஹா சண்டி ஹோமம்; கலெக்டர் சாமி தரிசனம்

    • உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடந்தது.
    • சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடியில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மஹா சண்டி ஹோமம் இதில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆலோசணைபடி சுந்தரேச சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேச குருக்கள் ஆகியோர் மஹா சண்டிஹோமம் பூஜைகள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவர்களுக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், மணக்குடி ஊரா ட்சி மன்ற தலைவர் வீரமணி, முன்னாள் தலைவர் வடிவேலு, ஆலவேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்க ட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குல தெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொ ண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×