என் மலர்
மதுரை
- தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
- பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
மதுரை:
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் போட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்தில் நடக்கிறது. இதனையடுத்து வரும் 15-ஆம் தேதி பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கு கேலரிகள், மாடு சேகரிக்கும் இடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் விழா இன்று நடந்தது. வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முகூர்த்த கால் நட்டு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளரிடம் கூறுகையில்,
அலங்காநல்லூர் அருகே கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் ஏற்பாடு செய்யும் ஜல்லிக்கட்டு அல்லது கிரிக்கெட் போன்றவற்றை நடத்தலாம். தற்போது மாமதுரை அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வழக்கம்போலவே வீரர்களும், காளை உரிமையாளர்களும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பதிவாகும் எண்ணிக்கை அடிப்படையில், காளைகள் அவிழ்க்கப்படும்.
இதுகுறித்த அறிவிப்பை கலெக்டர் விரைவில் வெளியிடுவார் என்றார்.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழு அறிவித்துள்ளது.
- மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
- ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ஊழல் நடந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.
- உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை.
மதுரை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திரை இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே அவர்களை கைது செய்வதும், வழக்குப் பதிவு செய்வது மட்டும்தான் தமிழகத்தில் நடைபெறுகிறது.
பள்ளிக்காக ரூ.44 ஆயிரம் கோடி செலவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள், அதை செய்தார்களா? அதற்கு சாட்டை எடுத்து அடிக்கட்டுமா? அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை முதல் பிரச்சனை இல்லை, அதுபோல எக்கச்சக்க பிரச்சனைகள் உள்ளது.
மாணவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என தி.மு.க. அமைச்சர்கள் கூறுவது போல் நிச்சயமாக இதில் யாரும் அரசியல் செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லியிருப்பதால் இதற்கு பேச முடியாது. அது நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் போராடுகிறோம்.
அரசியல் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அரசியல் செய்யாமல் அவியல் செய்ய வேண்டுமா என்று கேட்ட முதல்வர் தானே இவர். நீங்கள் அவியல் செய்யும்போது தற்போது நாங்கள் கேட்டால் மட்டும் அது அரசியல் என்றால் ஜனநாயக ரீதியாக இது எப்படி நியாயம்.
மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். அதுபோன்று மக்களை திசை திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூர் பிரச்சனையும் பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்சனைகள் உள்ளது. அது கூட தெரியாமல் தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எதுக்கு அரசியலில் இருக்கிறார்கள். அரசியல் தெரியாமல் இப்படி கேள்வி கேட்டால் நான் சிரிக்க தான் செய்வேன்.
உங்கள் கூட்டணி ஆளுகின்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. மணிப்பூரில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பது தெரியாமல் முதல்வர் ஸ்டாலினோ, தி.மு.க.வி.னரோ, காங்கிரஸ் கட்சியினரோ இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியலில் இருக்கக்கூடாது.
பேரணியில் பங்கேற்றதற்காக நாங்கள் கைது செய்யப்படுவோம். ஜனநாயக ரீதியாக தமிழகத்தில் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்தால் செய்யட்டும், பார்த்துக் கொள்ளலாம். பா.ஜ.க. மாநிலத் தலைவரை மாற்றுவதற்காக வாய்ப்புள்ளதா என்பதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.
பாலியல் பிரச்சனை உருவெடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டுத்திறன் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் எதற்காக இந்த மையங்கள். பெண்களுக்கு எதிராக ஒரு வன்கொடுமை நடந்தால் அது எந்த ஜாதியோ, சமுதாயமோ, கட்சியோ எதுவும் பார்க்காமல் அந்த சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமை என்று பார்க்க வேண்டும், அதில் அரசியல் செய்யக்கூடாது.
பாலியல் விவகாரத்திற்கு எதிராக த.வெ.க. தலைவர் விஜய் குரல் கொடுத்து உள்ளார். இதேபோல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் மட்டும் கொடுக்கக்கூடாது, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள். த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் பதில் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
- 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
மதுரை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஈடுபட்ட ஞானசேக ரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள னர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை நிய மித்து ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. அதேபோல் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை காண போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கோஷமும் வலுத்துள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து சட்டம்-ஒழுங்கை பாது காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டி பா.ஜ.க. மகளிரணி சார்பில் நீதி யாத்திைர பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளி ரணி சார்பில் மாநில தலைவர் உமாரதி தலைமை யில் மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி நடைபெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திலகர் திடல் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தடையை மீறி பேரணி நடைபெறும் என்று சென்னையில் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.

மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்க ணக்கான மகளிரணி நிர்வா கிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பேரணி தொடங்குவதாக அறி விக்கப்பட்ட சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
- ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. இந்த பகுதியில் தயாராகும் வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. குறிப்பாக செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண் டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்த கரும்புகளை விவசாயிகள் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தைப் பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனி மதிப்பும் சிறப்பும் உண்டு.
இதுகுறித்து கரும்பு விவசாயி கல்லணையை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-
எங்களுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட பரம்பரை பரம்பரையாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளாக ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கொப்பரை வரை வெல்லம் தயாரிப்போம். தினம்தோறும் 500 கிலோ வரை வெல்லம் தயார் செய்து வருகிறோம். ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை மொத்த மார்க்கெட்டில் விலை போகிறது. 10 கிலோ கொண்ட ஒரு மணு ரூ.550 முதல் 700 வரை விலை போகிறது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம். 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து ஆலையில் நாட்டு வெல்லம் தயாரித்து வருகிறோம். வருடத்தில் 10 மாதம் வரை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தவிர வேறு விவசாயிகளிடம் கரும்பு வாங்கி வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு கொப்பரை வெல்லம் தயாரிப்பில் சுமார் 90 முதல் 95 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.
வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 நபர்கள் வரை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட உழுவது, பார் போடுவது, தோகை உரிப்பது, இரண்டு முறை உரம் வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவு மட்டும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. கரும்பு வெட்டு கூலி, ஆலை ஆட்டு கூலி செலவு போக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கரும்பு நடவிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது. இந்த ஆலை கரும்பு அறுவடை செய்து அதை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்தப்பட்டு மண்டை வெல்லங்களாக தயாரித்து மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண்டை வெல்லத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப் பட்டாலும் பிற மாநிலங்களில், அலங்காநல்லூர் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு தனி மவுசு தான். வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.
வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். இதனால் இந்த தொழில் நலிவடைந்து போகிறது. அரசு நெல் கொள்முதலுக்கு விலை நிர்ணயித்தது போல இந்த நாட்டு வெல்லத்திற்கும் அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எங்களைப் போன்ற நேரடி விவசாயிகள் கரும்பு ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 82 பேருடன் வந்த தனியார் பேருந்து திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.
- அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர்.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 82 பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் வைரமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.
சங்கரன்கோவில், சிவகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 82 பேருடன் வந்த தனியார் பேருந்து காலை ஆறு மணிக்கு திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.
அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கி அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி சுவர் மீது ஏறி நின்றது.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் ஒவ்வொருவரும் முன் இருக்கை கம்பியில் மோதியதில் பெண்கள் 8 பேர் உட்பட 12 பேர் காயம டைந்தனர்.
அவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
- படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது.
ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது" என்று பேசினார்.
- தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.
- தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
மதுரை:
2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு அ.திமு.க.விற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் விடியா அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க. முன்னெடுத்துச் செல்லும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர்.
2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். தி.மு.க. அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
- 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
- ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
மதுரை:
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த காதலர்களான காமாட்சி மற்றும் தர்னிகா புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மன் கோவில் முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.
4 ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது காதலிக்கு காதலன் மாங்கல்யம் கயிறை கட்டியபோது கூடியிருந்த நண்பர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என ஏராளமானோர் மணமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் என்ற முழக்கத்தோடு அட்சதை தூவி வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.
உலகமெங்கும் புத்தாண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படக்கூடிய நாளில் எங்களுடைய காதல் திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்றைய நாள் போலவே என்றும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும், மீனாட்சி அம்மனின் தரிசனத்தோடு எங்களுக்கு காதல் திருமணம் புத்தாண்டு நாளில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு மீனாட்சி அம்மனின் ஆசிர்வாதத்தோடும் எங்கள் திருமணம் நடந்துள்ளது எனவும் புதுமண தம்பதியினர் தெரிவித்தனர்.
- ஏசி எந்திரத்தில் இருந்து தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று பரவியது.
- ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது.
மதுரை:
மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் செட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் புகை வெளியேறிய நிலையில் அதன் மூலம் தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று அனைத்து அறைகளுக்கும் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த ஐந்து செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கி டையே தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடியில் இருந்து வானுயர எழுந்த புகையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் உடனடியாக கீழே இறங்கி வந்த செவிலியர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு நர்சிங் மாணவி மயக்கம் அடைந்ததார். பின்னா் இயல்பு நிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே தீயானது வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது. தகவல் அறிந்த மதுரை தல்லாகுளம் தீய ணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து, செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்புகையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். தீ விபத்து தொடர்பாக புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
- காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சினிமா துறை மட்டுமின்றி உணவகம் உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் முக்கிய சந்திப்பு பகுதிகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.
அதில் நடிகர் சூரியின் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24.06.2022 அன்று தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பொதுப்பணித் துறையினரால் இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உணவக நிர்வாகத்தினர் அருகில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் தொற்று நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், கரப்பான் திரிகின்றன.
செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக நிர்வாகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.
எனவே செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். அத்துடன் இந்த உணவகத்தின் அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.
இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இங்கு உணவு வகைகளை வாங்குகிறார்கள்.
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சூரிக்கு சொந்தமான உணவக நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த புகார் மனு காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
- அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க கோரி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக்கொள்ளப் போகிறார்? என்ற கேள்வியுடன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேருந்து நிலையம், வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஒட்டி இருக்கிறார்கள்.






