மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
மதுரை சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

மதுரை மத்திய சிறையில் போலி கணக்குகள் மூலம் சுமார் ரூ.1.63 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

ஊழல் தொடர்பாக 3 சிறைத்துறை அதிகாரிகள் உட்பட சில வியாபாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் ஊழல் நடந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மத்திய சிறை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com