என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்
Byமாலை மலர்18 July 2022 8:54 AM GMT (Updated: 18 July 2022 9:46 AM GMT)
- திருப்பரங்குன்றம் அருகே லாரி டிரைவரை பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்பழஞ்சி. இப்பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து லாரியில் மண் எடுத்து செல்லப்படுகிறது.
வழக்கம் போல் லாரியில் மணல் ஏற்றி சென்ற போது 3 பேர் கும்பல் லாரியை வழிமுறைத்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட கல்குவாரி நிறுவனம் தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசில் லாரி டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய தென்பழஞ்சியைச் சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா, ராஜாமணி, சோணமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X