search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்
    X

    லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

    • திருப்பரங்குன்றம் அருகே லாரி டிரைவரை பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்பழஞ்சி. இப்பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து லாரியில் மண் எடுத்து செல்லப்படுகிறது.

    வழக்கம் போல் லாரியில் மணல் ஏற்றி சென்ற போது 3 பேர் கும்பல் லாரியை வழிமுறைத்து நிறுத்தி உள்ளனர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட கல்குவாரி நிறுவனம் தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசில் லாரி டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய தென்பழஞ்சியைச் சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா, ராஜாமணி, சோணமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×