என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர் நீரில் மூழ்கி சாவு
- திருமங்கலம் அருகே வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
- நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்(21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.
இவரது நண்பர்கள் கார்த்திக், பொன்ராசு,சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகிய 6 பேரும் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன் பட்டியில் செல்லையா என்பவருடைய தோட்ட கிணற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது கோகுல் திடீரென்று கிணற்றில் மூழ்கினார். நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கோகுல் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது–குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கோகுலின் உடலை 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.
அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்