search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி
    X

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் “என் குப்பை எனது பொறுப்பு” என தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. 

    தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி

    • தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் "என் குப்பை எனது பொறுப்பு" என தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது மற்றும் வணிக கடைகளில் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பேரூராட்சி வளாகம் முதல் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அலுவலர்கள், பேரணியாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் துணைத்தலைவர் ராமராஜன் முன்னிலையில் கவுன்சிலர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×