என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுமி பலி
- மேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 8 வயது சிறுமி பலியானார்.
- பல மணி நேர போராட்டத்திற்கு பின் யாசிகாவின் உடல் மீட்க்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் யாசிகா(வயது8).இவர் ஆலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
மருதுபாண்டி பட்டூரில் உள்ள தனியார் தோப்பில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அங்கு சென்ற யாசிகா விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனை யாரும் பார்க்கவில்லை.
இந்த நிலையில் சிறுமி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்த மருதுபாண்டி மற்றும் குடும்பத்தினர் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசாருக்கும், மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியை தேடினர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் யாசிகாவின் உடல் மீட்க்கப்பட்டது. உடலை கைப்பற்றிய மேலவளவு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மு்னனதாக சிறுமியின் உடலை பார்த்து பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்